சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014
மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி
முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி
ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான
கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி
முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி
ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த
முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
உங்கள் ராசிக்கு இதுவரை
ஜென்ம சனியாகி ராசியில் உட்சம் பெற்று தொல்லைகள் சிரமங்கள் கொடுத்துவந்த ஜென்ன்ம
சனி விலகி பாத சனியாக மாறுகிறார் ஜென்ம சனியால் அதிக சோதனைகள் கொடுத்துவந்த சனி
விலகுவது கொஞ்சம் ஆறுதலான விஷயம் ,குரு 10 இல் எருபதால் சனி விலகியும் குரு
பெயர்ச்சி வரை சிறப்பு இல்லாத நிலையே நீடிக்கும் தொழில் முடக்கம் இருந்து கொண்டே
இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் தொழிலில் சற்று ஆறுதல் கொடுக்கும்
ஆனால் குடும்ப உறவில்
கசப்புகள் வம்பு வழக்குகள் கொடுக்கும் ,குரு பெயர்ச்சி வரை ஜாமீன் விசியத்தில்
கவனம் தேவை ,குரு பெயர்ச்சிக்கு பின் வண்டி வாகன யோகம் திருமண யோகம் , வீடு
கட்டுவது வெளிநாடு செல்வது போன்றவை சிறப்பாக அமையும் .ஜென்ம சனியை காட்டிலும்
இப்போது பாதகங்கள் குறையும்
பரிகாரம்
:
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .
சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில்
வழிபாடு செய்ய வேண்டும்
சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து
விட்டு உணவு உண்பது சிறப்பு
வருடத்துக்கு
ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது
No comments:
Post a Comment