Sunday, 26 October 2014

கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
      கடகராசியான உங்கள் ராசிக்கு இதுவரை நடந்து வந்த அர்த்தஅஷ்டம சனி விலகுகிறது . 5.07.2015 குரு பெயர்ச்சி வரை பண விசியத்தில் கவனம் தேவை, ஜாமீன் மற்றவர்கள் பிரச்னைக்கு முன் நிற்க கூடாது. குரு பெயர்ச்சிக்கு பின் எல்லாம் உங்களுக்கு சாதகமான அமைப்பை உண்டாகும்.

      தொழிலில் நிம்மதிஉண்டாகும் , பண வரவு உண்டாகும் ,சொத்து பிரச்னை திருமண தடைகள் எல்லாம் நீங்கும் ,கல்வி குழந்தைகள் வகையில் உண்டான பிரச்னைகள் நீங்கும் ,அலைசல்கள் குறையும் பிரிந்த கணவன் மனைவி சேர்தல்,புத்திர பாக்கியம் ,வெளியூர் வெளிநாடு வேலை வாய்ப்பு உண்டாகும் பண ஆதாயம் வந்து சேரும் .குரு பெயர்ச்சிக்கு பின் அதிக படியான நன்மைகள் வந்து சேரும் .
     .
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு 

No comments:

Post a Comment