Wednesday, 19 February 2014

நம் தலை விதி பற்றி தெரிந்து கொள்வோம்


நம் தலை விதி பற்றி தெரிந்து கொள்வோம்

நமக்கு எதாவது கஷ்டம் வந்தால் அது என் தலை விதி அல்லது என் தலை எழுத்து என்று சொல்லுவோம் .தலையை மொட்டை அடித்து பார்த்தால் ஏதாவது எழுதி இருகிறதா என்று பார்த்தல் ஒன்னும் இருக்காது பின் என் எல்லோரும் தலை விதி, தலை எழுத்து என்று சொல்லுகிறோம்
தலை விதி என்றால் என்ன என்று பாப்போம். .தலை விதி என்பது, தலையில் எழுதும் விதி அல்ல, தலை என்றால் முதல், என்று அர்த்தம் .அதாவது முதல் விதி என்று அர்த்தம் நாம் ஜெனனம் ஆவதற்கு முன்னமே நமக்கு விதிக்கப்பட்ட முதல் விதி என்று அர்த்தம் .அது என்ன முதல் விதி அது எப்போது எழுதபட்டது என்று பார்போம்

ஒரு ஜெனனம் நிகழ ஒரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் அந்த இணைவு நடக்கும் போது அதாவது கரு ஊட்டல் நடக்கும் போது இருக்கும் தாயின் நிலை , தந்தையின் நிலை, தாயின் உடல்நிலை ,தந்தையின் உடல்நிலை ,கோள்களின் நிலை இவை அனைத்தும் சேர்ந்து அங்கே நமக்கு நம்முடைய தலை விதியை அல்லது முதல் விதியை அங்கே உருவாக்கும் அதன் படியே நாம் ஜெனனம் நடக்கும். நம்முடைய ஜெனனம்அப்போதே .தீர்மானித்து விடும், நம்முடைய ஜெனனமே முதல் விதி,படியே சுகபிரசவமமா  அல்லது ஆப்ரேசனா என்பதை அப்போதே முடிவாகிவிடும் .அதனால் தான் நாம் முன்னோர்கள் தாலிகட்டும் நேரம் போலவே ஆணும் பெண்ணும் இணையும் சாந்தி முகூர்த்ததிற்கு அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றுஉள்ளனர்

என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்

No comments:

Post a Comment