சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014
மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி
முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி
ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான
கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி
முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி
ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த
முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
இது வரை 7 ½ வருடம் பாடாத பாடு படுத்தி வந்த சனி முடிவ்வுக்கு வந்துவிட்டது
.கடந்த 2 ½ வருடமாக வாக்கு
ஸ்தானத்தில் உட்சம் பெற்ற சனி நீங்கி நல்ல
காலம் பிறக்க போகிறது. வீடு, வாகன வசதி சொத்து சேர்க்கை கொடுக்கும் . மூணாம்
இடத்தில சனி இருப்பதால் தைரியம் துணிவுடன் எடுத்த காரியம் எல்லாம் முடிபீர்கள் .
திருமண பாக்கியம் புத்திர பாக்கியம்
உண்டாகும் ,கடன் தொல்லை நீங்கும் இழந்த பதவி வந்து சேரும் , எதிரிகள் உங்களிடம்
சரண் அடைவார்கள் தொழில் விருத்தி புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பகையாக
இருந்த உறவுகள் வந்து சேர்வார்கள்,வழக்குகளில் வெற்றி கிட்டும் . இந்த சனி
பெயர்ச்சி நல்ல முன்னேற்றம் கொடுக்கும் .
பரிகாரம்
:
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .
சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில்
வழிபாடு செய்ய வேண்டும்
சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து
விட்டு உணவு உண்பது சிறப்பு
No comments:
Post a Comment