Monday, 8 December 2014

பொன்மொழிகள்..

பொன்மொழிகள்...
1. பேசா விரதமே பெருவிரதம். - பழமொழி
2. யாகாவாராயினும் நாகாக்க. - திருக்குறள்
3. உடலும் உள்ளமும் கெடுவதற்குக் காரணம் வாய்தான் - போர்னியா
4. சில சமயங்களில் வாய்திறந்து பேசுவதைவிட பேசாமல் இருப்பதே மிகுந்த பலனைத் தரும்.- மகாத்மா காந்தி
5. கால் வழுக்கினால் உடல் ஊனமடையும். நாக்கு வழுக்கினால் வாழ்க்கையே பாழாகிவிடும்.
- ஹென்றிபோர்ட்
6. நீ பேசாத வார்த்தைக்கு நீ எஜமான். நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான். - பைபிள்
7. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை, அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.
- நபிகள் நாயகம்
8. தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக் கொள்வான். - தாமஸ் புல்லர்
9. அறிவாளி யோசித்துவிட்டுப் பேசுகிறான்; முட்டாள் பேசிவிட்டு யோசிக்கிறான். - டனலல்
10. எல்லோருக்கும் காது கொடுங்கள்; எவரிடமும் வாய் கொடுக்காதீர்கள். - ஷேக்ஸ்பியர்

No comments:

Post a Comment